சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், ESI மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.


Coimbatore: கோவை சூலூர் பகுதியில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை ESI மருத்துவமனையில் சிறுமியின் குடும்பத்தினரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.




பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சிறுமி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். புகார் அளிக்கப்படுவதற்கு முன்பே சம்பவம் நடைபெற்றிருப்பது துரதிருஷ்டவசமானது என்றும் அவர் கூறினார்.






இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை துரிதமாக கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வழக்கின் விசாரணை வேகமாக முன்னெடுக்கப்படும் என்றும், உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.




குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர அரசு உறுதியாக செயல்படும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும், முதல்வர் விரைவில் நிதியுதவி அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.




சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின்படி, சிறுமி காணாமல் போன ஒரு மணி நேரத்திற்குள் இந்த கொடூரம் நடைபெற்றுள்ளதாகவும், இரவு 8 மணி முதல் 9 மணி நேரத்தில்தான் புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தற்போது இரண்டு பேரே குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அரசு எந்தவித சமரசமும் செய்யாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.




குற்றம் நடைபெற்ற பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதிக குற்றச்செயல்கள் நடைபெறும் பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.




மேலும், தமிழகமெங்கும் சிங்கப்பெண்கள் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், வரும் 27ஆம் தேதி திட்டம் அமலுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இந்த திட்டத்தின் மூலம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்றும், RTO மற்றும் காவல்துறை இணைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...