புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதேசமயம், திருக்கோயில் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளையும் சங்கம் முன்வைத்துள்ளது.


கோவை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் நேர்மையான மற்றும் மக்கள் நல ஆட்சியை முன்னுதாரணமாக கொண்டு, புதிய முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்கள் சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களின் தெய்வங்களின் அருளும், மக்களின் ஆதரவும் புதிய அரசுக்கு கிடைக்க வேண்டும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் புதிய அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், முதல்வரின் ஆட்சி மக்கள் நல மறுமலர்ச்சியை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் சங்கம் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் திருக்கோயில்கள் தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகளையும் சங்கம் முன்வைத்துள்ளது.

அதில், முன்னோர்கள் உருவாக்கிய திருக்கோயில்களுக்கு அவர்களது வாரிசுகள் மட்டுமே பரம்பரை அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும், பரம்பரை அறங்காவலர்களை சட்டப்பூர்வ நிர்வாகிகளாக அறநிலைத்துறை அங்கீகரிக்க வேண்டும், மாநில மற்றும் மண்டல அளவிலான திருக்கோயில் நிர்வாக குழுக்களில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், மேலும் இந்து சமய அறநிலைத்துறையின் உயர்மட்ட குழுக்களிலும் தமிழ்நாடு திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் சங்கத்திற்கு இடமளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...