“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறையிலும் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


Coimbatore:

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரகவியல் (Kidney Ward) வார்டில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமின்றியும், தண்ணீர் வசதி இன்றியும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையின் செயல்படும் சிறுநீரக வார்டில் நாள்தோறும் 30 முதல் 50-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுடன் தங்கி இருக்கும் உறவினர்களையும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு தினமும் தங்கி உள்ளனர். ஆனால், இத்தனை பேருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, பெண்களுக்கான கழிப்பறை நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருப்பதால், பெண் நோயாளிகள் மற்றும் பெண்கள் உறவினர்கள் ஆண்களுக்கான கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுகாதாரமற்ற நிலை அவர்களின் உடல்நலத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் உடனிருப்போர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கழிப்பறைகளில் அடிக்கடி தண்ணீர் பிரச்சனை ஏற்படுவதுடன், தண்ணீர் இல்லாத நிலை, உணவுக் கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதாக நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் வயதான நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கூறுகையில், “கடந்த 7 மாதங்களாக இந்த வார்டுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறேன். கழிப்பறையில் தண்ணீர் இல்லை. மருத்துவக் கழிவுகள் மற்றும் உணவுக் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன. பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

ஒரு வார்டில் மட்டுமல்லாமல், மருத்துவமனையின் பல வார்டுகளிலும் இதே நிலை நீடிப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவை மட்டுமில்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையை பெரிதும் நம்பி வரும் பொதுமக்களுக்கு கழிப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை உரிய சுகாதாரத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...