தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி மே 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறும். ரூ.1,770 கட்டணத்தில் உலர்ந்த தக்காளி, சாஸ், கற்றாழை பானம், மிட்டாய் தயாரிப்பு கற்பிக்கப்படும்.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19.05.2026 மற்றும் 20.05.2026 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த பயிற்சி வேளாண் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பயனுள்ளதாக அமையும்.




பயிற்சியில் தக்காளியிலிருந்து உலர்த்தப்பட்ட தக்காளி, ஊறுகாய், சாஸ், ketchup, சூப் பவுடர், ஜாம் ஆகியவற்றை தயாரிக்கும் முறைகள் கற்பிக்கப்படும். கற்றாழையிலிருந்து பழரச பானம், தயார் நிலை பானம், பானம், மிட்டாய் ஆகியவற்றை தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்படும்.




இந்த பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தொகையை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்தலாம்.




பயிற்சி அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003 இல் நடைபெறும். பயிற்சியாளர்கள் வாயில் எண் 7, மருதமலை சாலை வழியாக பயணித்து வரலாம்.




மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003 என்ற முகவரியிலும், 94885 18268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...