மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு, புதிய குறுந்தொழில் பேட்டைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


Coimbatore: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில், இன்று நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சுருளிவேல் மற்றும் சிவசண்முக குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், குறு மற்றும் சிறு தொழில் முனைவோர் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மாதாந்திர நிலை கட்டணமாக கிலோவாட்டுக்கு ரூ.35 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது ரூ.165 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

சுமார் 450 சதவீத கட்டண உயர்வு காரணமாக தொழில் முனைவோர் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், எனவே தமிழக அரசு உடனடியாக மின்சார நிலை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாநில வணிகவரி துறை 2007 முதல் 2022 வரையிலான பழைய கணக்குகளை கேட்டு ஆயிரக்கணக்கான தொழில் முனைவோருக்கு நோட்டீஸ் அனுப்பி அபராதம் விதித்து வருவது தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும், இந்த நடைமுறையை தமிழக அரசு தடை செய்து தொழில் முனைவோரின் நலனை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோவை குறிச்சி பகுதியில் 53 ஆண்டுகளுக்கு முன்பு தொழில்பேட்டை அமைக்கப்பட்ட பிறகு, உற்பத்தி சார்ந்த குறுந்தொழில் முனைவோருக்காக புதிய தொழில்பேட்டைகள் உருவாக்கப்படவில்லை என்றும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, கோவை நகரைச் சுற்றிய 25 கிலோமீட்டர் சுற்றளவில் அரசுக்கு சொந்தமான அல்லது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாத நிலங்களை கையகப்படுத்தி, குறுந்தொழில் முனைவோருக்கென புதிய தொழில்பேட்டைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதேபோல், ஜாப் ஆர்டர் நிறுவனங்கள், வெட் கிரைண்டர், மோட்டார் பம்ப் மற்றும் கம்ப்ரசர்களுக்கு ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், தொழில்பேட்டைகள் அருகே செயல்படும் மதுபான பார்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிலுக்கு தனி குறியீட்டு எண் வழங்கி, பிளாஸ்டிக் தொழில் உற்பத்தியாளர்களுக்கென தனி தொழில்பேட்டை அமைக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் போன்ற அரசுத் துறைகள் டெண்டர் விடும்போது தமிழகத்தை சேர்ந்த குறுந்தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...