கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கான நூலக வசதிகள், கோடைகால சிறப்பு வகுப்புகள் மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார். 48,000 புத்தகங்களுடன் கூடிய நவீன வசதிகள் செயல்படுகின்றன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran வடக்கு மண்டலத்திற்குட்பட்ட கணபதிமாநகர் பகுதியில் அமைந்துள்ள முதல்வர் படைப்பகத்தினை நேரில் ஆய்வு செய்தார். இன்று (19.05.2026) நடைபெற்ற இந்த ஆய்வின்போது, படைப்பகத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய மண்டலங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் TNPSC, UPSC, வங்கி மற்றும் இரயில்வே உள்ளிட்ட பல்வேறு அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான நவீன நூலக வசதிகளுடன் கூடிய அமைதியான மற்றும் அறிவார்ந்த கற்றல் சூழலை வழங்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.



மேற்கு மண்டலம் வார்டு எண் 33க்குட்பட்ட கவுண்டம்பாளையம் பிரபு நகர் மற்றும் வடக்கு மண்டலம் வார்டு எண் 20க்குட்பட்ட கணபதிமாநகர் ஆகிய 2 இடங்களில் தலா ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் தரைதளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு முதல்வர் படைப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.



இம்மையங்களில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் சுமார் 48,000க்கும் மேற்பட்ட பல்வேறு புத்தகங்களுடன் கூடிய நூலகம், கட்டணமில்லா இணைய வசதி, குளிருட்டப்பட்ட ஆலோசனைக்கூடங்கள் மற்றும் கணினி உள்ளிட்ட அலுவலக கட்டமைப்புடன் கூடிய CO-Working Space அமைக்கப்பட்டுள்ளன. புதிய தொழில் முனைவோர்களுக்கான சேவைகள், தகவல் தொழில்நுட்ப மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையிலும் மற்றும் வேலை தேடுபவர்கள், தொழில் முனைவோருக்கான பரந்த அளவிலான பல்வேறு சேவைகளுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய முதல்வர் படைப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.



இன்றைய தினம் வடக்கு மண்டலம் வார்டு எண் 20க்குட்பட்ட கணபதிமாநகர் 4வது பிளாக் பகுதியில் செயல்பட்டுவரும் முதல்வர் படைப்பகத்தினை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் மற்றும் சிறுவர்களுக்கு கோடைகால சிறப்பு விளையாட்டுகளான செஸ், அபாகஸ் மற்றும் டிஜிட்டல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.



மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடிய ஆணையாளர், பயிற்சி வகுப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமெனவும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, வடக்கு மண்டலம் வார்டு எண் 28க்குட்பட்ட FCI சாலை முதல் சிங்காநல்லூர் குளம் வரை செல்லும் கிளை வாய்க்கால் பகுதியில் மழைக்காலங்களில் தங்கு தடையின்றி நீர் செல்லும் வகையில் சுமார் 1.37 கி.மீட்டர் நீளத்திற்கு கால்வாய் தூர்வாரும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர்கள் இளங்கோவன், L.S.மகேஷ், நூலக பொறுப்பாளர் சரண்யா, ஒருங்கிணைப்பாளர் அக்ஷயா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...