உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.


திருப்பூர்: இன்று மே 12, உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செவிலியர்களின் அர்ப்பணிப்பு சேவையை போற்றும் மற்றும் அவர்களது கடமையை உணர்த்தும் வகையில் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



செவிலியர் குலவிளக்காக போற்றப்படும் “புளோரன்ஸ் நைட்டிங்கேல்” அம்மையாரின் பிறந்தநாளான இன்று உலக செவிலியர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி உலகெங்கும் மருத்துவத் துறையில் செவிலியர்களின் ஒப்பற்ற சேவையைப் போற்றும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.



அதன்படி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செவிலியர் பள்ளி முதல்வர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

இதில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, நோயாளிகளுக்கு பாகுபாடின்றி தார்மீக அடிப்படையில் அர்ப்பணிப்புடன் சேவை செய்வோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவிகள், “ஆரோக்கியமான சமுதாயம் அமைப்போம்”, “செவிலியர் பணியே புனிதமானது”, “நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

முன்னதாக, உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி செவிலியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Newsletter

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...