அருந்ததியினருக்கான பாதை ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

கோவை மாவட்டம் செங்கத்துறை பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையை மற்றொரு பிரிவினர் ஆக்கிரமித்ததை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள செங்கத்துறை பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலம், அம்மனை ஊர்வலமாக எடுத்து செல்லும் பாதை உள்ளிட்ட நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 10-ம் தேதி மாரியம்மனை ஊர்வலமாக எடுத்து செல்லும் போது, பழனிச்சாமி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தியதாகவும், இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்ககோரி, அப்பகுதி பொதுமக்கள், தீண்டாமை ஒழிப்பு முண்னனி, ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்பினருடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பழனிச்சாமி என்பவர் மாரியம்மம் கோவில் நிலம், அரசு புறம்போக்கு நிலம் உள்ளிட்ட 10 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும், மாரியம்மனை எடுத்து சென்ற போது தடுத்து நிறுத்தி சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தியதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தர வேண்டுமெனவும், அருந்ததிய மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டுமெனவும், பழனிச்சாமி உள்ளிட்டவர்களை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...