ப்ளஸ்-2 பொதுத் தேர்வு: கோவை மாநகராட்சி பள்ளிகளில் 91.80 சதவிகிதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி


கோவை மாநகராட்சியில் உள்ள 16 மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 2206 மாணவ, மாணவியர்களில் 2025 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று, 91.80 தேர்ச்சி சதவிகிதம் பெற்றுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் கடந்த மார்ச் 2017-ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2206 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர்.

இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 12) வெளியிடப்பட்டன. இதில் 2025 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16 மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 91.80 ஆகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.94, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.03. இது சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதத்தைவிட 3 சதவீதம் அதிகமாகும்.

மேலும், பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த பள்ளி கடந்த ஆண்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடந்து வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 98.82 தேர்ச்சி சதவீதமும், ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 98.55 தேர்ச்சி சதவீதமும், மாநகராட்சி பா.கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி 97.74 தேர்ச்சி சதவீதமும், இர.ச.புரம் (மேற்கு) மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.20 தேர்ச்சி சதவீதமும், இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 95.79 தேர்ச்சி சதவீதமும் பெற்றுள்ளன.

மேலும், செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 95.29 தேர்ச்சி சதவீதமும், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 94.53 தேர்ச்சி சதவீதமும், மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 93.45 தேர்ச்சி சதவீதமும், மாநகராட்சி சிட்டி மேல்நிலைப்பள்ளி 90.22 தேர்ச்சி சதவீதமும், சித்தாபுதூர் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 89.47 தேர்ச்சி சதவீதமும், அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 88.69 தேர்ச்சி சதவீதமும் பெற்றுள்ளது.

இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 85.63 தேர்ச்சி சதவீதமும், உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 84.51 தேர்ச்சி சதவீதமும், இராமநாதபுரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 80.56 தேர்ச்சி சதவீதமும், இர.ச.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 69.72 தேர்ச்சி சதவீதமும் ஆகமொத்தம் 16 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 91.80 ஆகும்.

மேலும் பாடப் பிரிவுகளில் கணக்குப் பதிவியலில் 9 மாணவ, மாணவியர்களும், வணிகவியலில் 38 மாணவ, மாணவியர்களும், பொருளியலில் 4 மாணவ, மாணவியர்களும், வணிக கணிதத்தில் 2 மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 53 மாணவ, மாணவியர்கள் முழு மதிப்பெண்ணான 200-க்கு 200 பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் 2016-ல் நடைபெற்ற பொதுத் தேர்வின் பாடப் பிரிவுகளில் 19 மாணவ, மாணவியர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர்.

மேலும், மாநகராட்சிப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இம்மாணவ, மாணவியர்களை ஊக்குவித்து, வழிநடத்திய பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.



Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...