கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விஜயா வங்கியின் வளர்ச்சி உயர்ந்துள்ளதாகவும், வராகடன் சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்சி பேட்டி அளித்துள்ளார்.
விஜயா வங்கியின் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்சி இன்று அவிநாசி சாலையில் உள்ள விஜயா வங்கி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறுகையில், வங்கியின் வளர்ச்சியில் வீட்டுக் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது.
தற்போது புதிதாக 168 கிளைகள் திறக்கபட்டுள்ளது. மேலும் கிளைகள் துவக்க வங்கி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. பனியன் உற்பத்தியாளர்கள் அதிகம் உள்ள திருப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் பலன் பெறும் வகையில் கிளைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாய கடன்களைப் பொருத்த வரையில் பண தேவைக்காக அதிக வட்டியில் வெளியாட்களிடம் கடன் பெற்றவர்களுக்கு பத்திரத்தை மீட்டு 8 சதவிகிதம் மற்றும் 9 சதவிகிதம் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன்கள் விஜயா வங்கி வழங்குகிறது. மேலும் வங்கி தொழில்துறையினர், கல்வி கடன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக கவனம் செலுத்தபடுகிறது. கடந்த சில மாதங்களில் வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது" என்றார்.
விஜயா வங்கியின் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்சி இன்று அவிநாசி சாலையில் உள்ள விஜயா வங்கி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறுகையில், வங்கியின் வளர்ச்சியில் வீட்டுக் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது.
தற்போது புதிதாக 168 கிளைகள் திறக்கபட்டுள்ளது. மேலும் கிளைகள் துவக்க வங்கி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. பனியன் உற்பத்தியாளர்கள் அதிகம் உள்ள திருப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் பலன் பெறும் வகையில் கிளைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாய கடன்களைப் பொருத்த வரையில் பண தேவைக்காக அதிக வட்டியில் வெளியாட்களிடம் கடன் பெற்றவர்களுக்கு பத்திரத்தை மீட்டு 8 சதவிகிதம் மற்றும் 9 சதவிகிதம் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன்கள் விஜயா வங்கி வழங்குகிறது. மேலும் வங்கி தொழில்துறையினர், கல்வி கடன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக கவனம் செலுத்தபடுகிறது. கடந்த சில மாதங்களில் வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது" என்றார்.