பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது இலியாஸ். இவர் மீது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மோசடி வழக்கு உள்ளது. இந்த மோசடி வழக்கு தொடர்பாக, அம்மாநில போலீசார் முகம்மது இலியாசை தேடிவந்தனர். ஆனால், அவர் வெளிநாட்டுக்கு சென்று தலைமறைவாகிவிட்டார்.
இந்த நிலையில், கேரள போலீசார் முகம்மது இலியாசின் புகைப்படம் மற்றும் அவர் தொடர்பான விவரங்களை விமான நிலைய இமிகிரேசன் (வெளிநாடு செல்வோர்களை சோதனை செய்யும் பிரிவு) அதிகாரிகளிக்கு கொடுத்தனர்.
அதன் பேரில், இன்று காலை 4.30 மணியளவில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்ததினர். அப்போது முகம்மது இலியாஸ் திருவனந்தபுரம் போலீசாரால் தேடப்படுபவர் என்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, திருவனந்தபுரம் போலீசாருக்கு, விமான நிலைய அதிகாரிகள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, கேரள போலீசார் கோவைக்கு விரைந்துள்ளனர்.