காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை திருடிச் சென்றனர். ரூ.2.5 லட்சம் மதிப்பிலான இத்திருட்டு சம்பவம் காங்கேயம் பகுதி விவசாயிகள் மத்தியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


Tiruppur: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பாப்பினி பகுதியில் விவசாயி பொன்னுசாமியின் (65) தோட்டத்தில் இருந்து மர்ம நபர்கள் 19 ஆடுகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் செய்து வருவதோடு ஆடு மாடுகளையும் வளர்த்து வரும் பொன்னுசாமி, வழக்கம் போல் நேற்று மாலை ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு மாலை நேரத்தில் தோட்டத்தில் உள்ள முக்கால் பட்டியில் அடைத்துவிட்டு இரவு தங்குவதற்காக வீட்டுக்கு சென்றார்.




நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்த 11 ஆடுகள், 1 கிடாரி மற்றும் 7 குட்டிகள் ஆகிய மொத்தம் 19 ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2.5 லட்சம் ஆகும் என்று விவசாயி பொன்னுசாமி தெரிவித்தார். காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக சென்றபோது ஆட்டுப்பட்டி காலியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி உடனடியாக காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரின் அடிப்படையில் காங்கேயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கேயம் பகுதியில் சமீபத்தில் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் இறந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மர்ம நபர்கள் ஆடுகளை திருடிய சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தண்ணீர் இல்லாமல் விவசாயமே பொய்த்துப்போன நிலையில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து அதில் வருமானம் ஈட்டிவரும் விவசாயிகள் மத்தியில் இந்த திருட்டு சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட ஆடுகளை மீட்டு குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பகுதி மக்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...