சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூரில் வாக்களிக்காதது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என முதல்வர் Stalin கோரிய நிலையில் இது நடந்துள்ளது.
Coimbatore: சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூரில் வாக்களிக்காதது அரசியல் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
Jayalalithaa ஆட்சி காலத்தில் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என வலம் வந்தவர் செந்தில் பாலாஜி. Jayalalithaa மறைவுக்குப் பின் திமுகவில் இணைந்து அமைச்சர் பதவியும் பெற்றார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் அமைச்சர் பதவியை இழந்தார்.
செந்தில் பாலாஜி இருந்தால் கரூரில் வெற்றி பெற்றுவிடலாம் என்பது முதல்வர் Stalin நம்பிக்கையாக இருக்கிறது. அதேநேரம் Vijay கரூருக்கு சென்றபோது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் செந்தில் பாலாஜி மீது பலரும் கடுமையான விமர்சனங்களை வைத்ததால் இந்த முறை அவரை கோவையில் களமிறக்கினார் முதல்வர் Stalin. அதோடு, கோவை திமுக தேர்தல் பொறுப்பாளராகவும் செந்தில் பாலாஜியை நியமித்தார்.
இந்நிலையில், நேற்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லை. வழக்கமாக செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர் ராமேஸ்வரம்பட்டி புதுப்பாளையத்தில் உள்ள வாக்கு சாவடியில் தான் வாக்களிப்பார். ஆனால் நேற்று காலை செந்தில் பாலாஜியின் சகோதரர் Ashok Kumar அங்கு வந்து வாக்களித்த போது 'அண்ணன் வருவார்' என அவர் சொல்லிவிட்டு சென்றார்.
ஆனால் மாலை 6 மணி ஆகியும் செந்தில் பாலாஜி அங்கு வந்து வாக்களிக்கவில்லை. செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாலும், கோவைக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்ததால் அவர் கரூருக்கு வாக்களிக்க வரவில்லை என சொல்லப்படுகிறது.
அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என முதல்வர் Stalin கோரிக்கை வைத்த நிலையில் செந்தில் பாலாஜியே அதை பின்பற்றவில்லை என அதிமுகவினர் விமர்சித்து வருகிறார்கள்.
Jayalalithaa ஆட்சி காலத்தில் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என வலம் வந்தவர் செந்தில் பாலாஜி. Jayalalithaa மறைவுக்குப் பின் திமுகவில் இணைந்து அமைச்சர் பதவியும் பெற்றார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் அமைச்சர் பதவியை இழந்தார்.
செந்தில் பாலாஜி இருந்தால் கரூரில் வெற்றி பெற்றுவிடலாம் என்பது முதல்வர் Stalin நம்பிக்கையாக இருக்கிறது. அதேநேரம் Vijay கரூருக்கு சென்றபோது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் செந்தில் பாலாஜி மீது பலரும் கடுமையான விமர்சனங்களை வைத்ததால் இந்த முறை அவரை கோவையில் களமிறக்கினார் முதல்வர் Stalin. அதோடு, கோவை திமுக தேர்தல் பொறுப்பாளராகவும் செந்தில் பாலாஜியை நியமித்தார்.
இந்நிலையில், நேற்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லை. வழக்கமாக செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர் ராமேஸ்வரம்பட்டி புதுப்பாளையத்தில் உள்ள வாக்கு சாவடியில் தான் வாக்களிப்பார். ஆனால் நேற்று காலை செந்தில் பாலாஜியின் சகோதரர் Ashok Kumar அங்கு வந்து வாக்களித்த போது 'அண்ணன் வருவார்' என அவர் சொல்லிவிட்டு சென்றார்.
ஆனால் மாலை 6 மணி ஆகியும் செந்தில் பாலாஜி அங்கு வந்து வாக்களிக்கவில்லை. செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாலும், கோவைக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்ததால் அவர் கரூருக்கு வாக்களிக்க வரவில்லை என சொல்லப்படுகிறது.
அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என முதல்வர் Stalin கோரிக்கை வைத்த நிலையில் செந்தில் பாலாஜியே அதை பின்பற்றவில்லை என அதிமுகவினர் விமர்சித்து வருகிறார்கள்.