ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். 24 திட்டங்களை எடுத்துரைத்து இரட்டை இலைக்கு வாக்கு கோரினார். ஒப்புட்டு சாப்பிட்டு சாமானிய மக்களுடன் கலந்துரையாடினார்.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் AIADMK வேட்பாளராக K.R. Jayaram போட்டியிடுகிறார். தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் இவருக்கு, பொதுமக்கள் மற்றும் பெண்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.




AIADMK பொதுச்செயலாளர் Edappadi Palaniswami மற்றும் BJP மாநிலத் தலைவர் Annamalai ஆகியோர் K.R. Jayaramஐ ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட நிலையில், நேற்று வேட்பாளர் ஆவாரம்பாளையம் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.




ஆவாரம்பாளையம் காய்கறி சந்தைக்கு சென்ற K.R. Jayaram, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தான் இந்த தொகுதிக்கு வைத்துள்ள 24 திட்டங்களை எடுத்துரைத்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், ஒரு தேங்காய் கடையில் அமர்ந்து கடைக்காரருடன் இணைந்து தேங்காய் விற்பனையில் ஈடுபட்டார். அங்கு வந்த மக்களிடம் நேரடியாக பேசி ஆதரவு திரட்டினார்.




பின்னர் சந்தையில் உள்ள ஒரு கடையில் ஒப்புட்டு வாங்கி சாப்பிட்டு, காய்கறி சந்தைக்கு வந்த மக்களிடம் ஆதரவு திரட்டினார். சிங்காநல்லூர் MLA K.R. Jayaramஇன் இந்த செயல் சந்தையில் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.




சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட K.R. Jayaram பேசும்போது, "சிங்காநல்லூர் தொகுதியில் நான் MLAஆக இருந்தபோது எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன். தற்போது மீண்டும் வெற்றி பெற்று MLAஆனதும், இந்த தொகுதிக்கு நிறைவேற்றுவதற்கு என்று 24 திட்டங்களை வைத்துள்ளேன்" என்றார்.




"MLAவாக தேர்ந்தெடுக்கப்பட்டதும், நான் வைத்துள்ள அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து நிறைவேற்றி, சிங்காநல்லூரை சிறந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்" என்று வாக்குறுதி அளித்தார். வேட்பாளரின் இந்த எளிமையான அணுகுமுறை வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...