“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு” – கருப்புக்கொடி ஏற்றிய செந்தில் பாலாஜி..!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றி திமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கருப்புக்கொடி ஏற்றி தனது கண்டனத்தை பதிவு செய்தார்.


கோவை: மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதா, தென்னிந்திய மாநிலங்களின், குறிப்பாக தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பறிக்கும் ஒரு “வரலாற்றுத் துரோகம்” என்று சாடிய முதலமைச்சர், நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இன்று (ஏப்ரல் 16, 2026) தமிழகம் முழுவதும் வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கும் கட்சியினருக்கும் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏற்றி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கரூரில் கருப்புக்கொடி ஏற்றிய செந்தில் பாலாஜி, “அன்று இந்திக்கு எதிராக பற்றிய தீ, இன்று இந்தியாவுக்காக பற்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தொகுதி மறுவரையறை (Delimitation) என்று தமிழ்நாட்டையும் தமிழர்களையும் தாக்கிடும் ஒன்றிய அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக கூட்டணியையும் கண்டித்து, தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கரூரில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு நடத்தப்பட்டது.

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு… அன்று இந்திக்கு எதிராக பற்றிய தீ, இன்று இந்தியாவுக்காக பற்றுகிறது… திக்கெட்டும் திராவிட தீ பரவட்டும்… டெல்லி பணியும் வரை இந்த தீ அணையாது…” என்று பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...