கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக திமுக அரசை விமர்சித்து பேசினார்.


பொள்ளாச்சி : பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று இரவு நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்த, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த பாஜக முன்னாள் மாநிலத்தலைசர்அண்ணாமலை, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் அலையை உருவாக்கி வருவதாக கூறினார்.



அவர் தொடர்ந்து பேசியபோது, “தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக நிரந்தர டிஜிபி நியமிக்காமல் பொறுப்பு டிஜிபி மூலம் ஆட்சி நடத்தப்படுகிறது. பொறுப்பு டிஜிபி கூறும் உத்தரவுகளை அதிகாரிகள் மதிக்காத நிலை உருவாகியுள்ளது. மேலும், அந்த பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் சென்றாலும் கூட, அதற்குப் பதிலாக மீண்டும் பொறுப்பு டிஜிபியையே நியமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது திமுக அரசின் நிர்வாக குறைபாட்டை வெளிப்படுத்துகிறது,” என்று குற்றம்சாட்டினார்.



மேலும், “முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியைச் சரியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதவி மற்றும் நாற்காலி மட்டுமே முக்கியம். ஆட்சி நடத்த இயலாத நிலையில் இருந்தால், பொறுப்பு முதலமைச்சரை நியமித்திருக்கலாம்,” எனவும் அவர் விமர்சித்தார்.

அண்ணாமலை தனது உரையில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்தும் கேள்வி எழுப்பினார். “பொறுப்பு டிஜிபி நியமனத்தின் விளைவாக மாநிலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 2080 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 8008 கொலை வழக்குகள், 39,900 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது,” என்று தெரிவித்தார்.



அதே நேரத்தில், பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாகவும் அவர் குற்றம்சாட்டினார். “கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தங்களது கட்சிப் பெயரையே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்தக் கட்சி திமுகவின் கொத்தடிமை கட்சியாக செயல்படுகிறது. அவர்களின் கட்சிக் கொடி, அடையாளங்கள் மட்டுமல்லாமல், பொதுச் செயலாளர் ஈஸ்வரனின் புகைப்படத்தைக் கூட பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது,” என்று கூறினார்.

முடிவில், “தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரான கட்சியும் ஆட்சியும் திமுக தான்,” என்று கடுமையாக விமர்சித்து தனது உரையை அண்ணாமலை நிறைவு செய்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...