தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில் ரோடு ஷோ நடத்தி எட்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். மாலை சென்னை திரும்புகிறார்.


Coimbatore: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இன்று மதியம் கோவை விமான நிலையத்திற்கு வரும் விஜய், கொச்சின் – சேலம் ஆறுவழிச் சாலை மார்க்கமாக அவிநாசி நோக்கிப் புறப்படுகிறார். மாலை 3 மணிக்கு அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் U டர்ன் எடுத்து மீண்டும் அதே வழியில் பைபாஸ் திருப்பூர் சாலை சந்திப்பு வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து கொச்சின் – சேலம் ஆறுவழிச்சாலை வழியாக பெருமாநல்லூர் நான்கு ரோடு சந்திப்பிற்குச் செல்லும் விஜய், மாலை 4 மணிக்கு வாகனத்தில் இருந்தபடி எட்டு வேட்பாளர்களை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறார்.

பின்னர் பெருமாநல்லூர் – திருப்பூர் சாலையில் பூலுவபட்டி வரை சென்று U டர்ன் எடுத்து மீண்டும் பெருமாநல்லூர் நால்வழிச்சாலை வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து சேலம் – கொச்சின் ஆறுவழிச்சாலை வழியாக கோவை விமான நிலையத்திற்குத் திரும்பும் விஜய், இன்று மாலை சென்னைக்குப் புறப்படுகிறார்.

விஜய் வருகையை முன்னிட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...