சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை அறிவிப்புகளை தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர். நெட்வொர்க் கட்டணம் ரத்து மற்றும் மின் தேவைக்கு ஊக்குவிப்பு அளிக்கப்படும்.


Coimbatore: சூரிய சக்தி மற்றும் மின்சாரத்துறை தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை அறிவிப்புகளுக்கு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மேற்கூரை சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு மானியம் வழங்கும் அறிவிப்பு தொழில்முனைவோர் மத்தியில் நல்வரவேற்பை பெற்றுள்ளது.



தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சாஸ்தா ராஜா இதுகுறித்து கூறும்போது, "இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மேற்கூரை சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை திட்டங்களுக்கு ஊக்கமளிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு மாநிலங்களில் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், தமிழ்நாட்டில் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுவது அபராதம் விதிப்பதற்கு சமமாக உள்ளது" என்றார்.


அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மின்சாரத்துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. வீடுகளுக்கு மேற்கூரை சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு சோலார் பேனல் அமைக்க ஒரு கிலோவாட்டிற்கு ரூபாய் 30,000 மற்றும் 2 கிலோவாட்டிற்கு ரூபாய் 60,000 மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், சூரிய சக்தி போன்ற மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு விரைந்து அனுமதி வழங்கப்படும் என்றும், அதன் மூலம் மின்சார உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. புனல் நீர், அனல் மின் நிலையம் போன்ற புதிய மின் உற்பத்தி நிலையங்களை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக குறு, சிறு தொழில்துறையினருக்கு மின்சார வாரியத்தால் விதிக்கப்பட்ட நிலை கட்டணம் வரைமுறைப்படுத்தப்படும். தொழிலுக்கான கட்டண விகிதம் தொழில்முனைவோர் பாதிக்காத வகையில் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு தொழிற்சாலைகளின் மின் தேவைகளுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை தாங்களே தயாரித்து பயன்படுத்துவதை ஊக்குவிக்க கூடுதலாக மானியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


"மின்சாரத்துறை சார்ந்து முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது" என்று தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சாஸ்தா ராஜா தெரிவித்தார்.

Newsletter

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...