கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னைக்கு 8 விமானங்கள், பெங்களூருக்கு 7 விமானங்கள் இயக்கப்படும். IndiGo நிறுவனம் 28 விமானங்களை இயக்கும்.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை மார்ச் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 28-லிருந்து 32 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோடைகால விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த புதிய அட்டவணை பயனுள்ளதாக அமையும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 28-ஆம் தேதி சனிக்கிழமை வரை குளிர்கால அட்டவணை அமலில் உள்ளது. இதன் காரணமாக தினமும் அதிகபட்சமாக 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோடை காலம் தொடங்கிய நிலையில் விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை மார்ச் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. புதிய அட்டவணையின்படி சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.






இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. புதிய அட்டவணையின்படி சர்வதேச நாடுகள் பிரிவில் கோவை - Sharjah இடையே Air Arabia நிறுவனம் சார்பில் வாரத்தில் 5 நாட்களும், கோவை - Abu Dhabi இடையே IndiGo நிறுவனம் சார்பில் வாரத்தில் 4 நாட்களும், கோவை - Singapore இடையே Scoot Airlines நிறுவனம் சார்பில் வாரத்தில் அனைத்து நாட்களும் விமானங்கள் இயக்கப்படும்.






Iran - Israel போர் காரணமாக கோவை - Abu Dhabi இடையே மட்டும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட விமான சேவை மேலும் ஒரு மாதம் ரத்து செய்யப்படுகிறது. நிலவரம் சீரடைந்த பின் அந்த சேவை மீண்டும் தொடங்கப்படும். மற்ற விமான சேவைகள் அனைத்தும் தடையின்றி வழங்கப்படும்.






உள்நாட்டு பிரிவில் கோவையில் இருந்து சென்னைக்கு தற்போது தினமும் 6 விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் 8 விமானங்கள் இயக்கப்படும். கோவையில் இருந்து பெங்களூருக்கு 7 விமானங்கள் இயக்கப்படும். கோவை - Goa இடையே தற்போது தினமும் இயக்கப்படும் விமான சேவை கோடைகால அட்டவணையிலும் தொடர்கிறது.




Air India நிறுவனம் சார்பில் 4 சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கோடைகால அட்டவணையின்படி கோவையில் இருந்து Delhi-க்கு மொத்தம் 3 விமானங்கள் இயக்கப்படும். கோவை விமான நிலையத்தில் IndiGo நிறுவனம் சார்பில் சென்னை, பெங்களூர், Hyderabad, Pune, Goa உள்ளிட்ட நகரங்களுக்கு தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.




கோடைகால அட்டவணை அமல்படுத்தப்பட்ட பின் IndiGo நிறுவனம் சார்பில் கோவையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரிக்கப்படுகிறது. விரைவில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடைகால விடுமுறை தொடங்க உள்ள நிலையில், கோவை விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய அட்டவணையின்படி பல்வேறு நகரங்களுக்கு வழங்கப்படும் விமான சேவைகள் கோடை விடுமுறை சுற்றுலா செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...