தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு செய்த இருவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளுக்கு தலா ரூ.3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.


Coimbatore: கோட்டூர் அருகே ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலாளியை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை ஜாதி வன்கொடுமைகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டீஸ்வரன் (55). ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 24.8.2019-ல் பட்டீஸ்வரன் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் மாற்று ஜாதியைச் சேர்ந்த சந்திரகுமார் (34), முரளிதரன் (33) ஆகியோர் பட்டீஸ்வரன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர்.

எனது வீட்டின் முன் ஏன் தேவையில்லாமல் நின்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்டதால், அவர்கள் இருவரும் பட்டீஸ்வரனுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதுடன், அவரை இரும்புக் கம்பியால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பட்டீஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கோட்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை ஜாதி வன்கொடுமைகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மார்ச் 25 அன்று விசாரித்த நீதிபதி K. விவேகானந்தன், குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரகுமார், முரளிதரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...