கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்க் கோலங்கள் வரைதல், கவிதை, பாட்டு மற்றும் தலைமைப் பண்புகளுக்காக திருமதி R. மணிமேகலைக்கு 'கலைத் தாரகை' விருது வழங்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. ரவி விருது வழங்கி சிறப்பித்தார்.


Coimbatore: கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து ஏற்பாடு செய்த விருது வழங்கும் விழா மார்ச் 25, 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.








தமிழ்க் கோலங்கள் வரைதல், கவிதை, பாட்டு மற்றும் தலைமைப் பண்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியதற்காக திருமதி R. மணிமேகலைக்கு 'கலைத் தாரகை' என்னும் உயரிய விருது வழங்கப்பட்டது. இவ்விருதை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr. ரவி மற்றும் கலை, அறிவியல் பீட டீன் திருமதி ராகவி ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.








இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக Rotary International மாவட்டம் 3026-ன் மாவட்டத் தலைவர் Rtn. PP. Hendry Amalaraj கலந்து கொண்டார். மேலும் கௌரவ விருந்தினராக ஓம் சக்தி ராஜா ராஜேஸ்வரி ஆலயம், கோவையின் முன்னாள் செயலாளர் P. Duraisamay பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.








தமிழ் பண்பாடு மற்றும் கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...