ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர், மெட்ரோபோலிஸ் இணைந்து "கலாச்சாரம் காக்க ஒரு வரலாற்று கருத்தரங்கு"


மூவாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கொண்ட இந்திய நாட்டின் வளமைகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், அவற்றை பாராட்டி பாதுகாக்கவும், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர், மெட்ரோபோலிஸ் இணைந்து கலாச்சாரம் காக்க ஒரு வரலாற்று கருத்தரங்கினை நடத்த திட்டமிட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கருத்தரங்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இந்த கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



இந்த ஆண்டு பல்லவர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள் மற்றும் ராண்டிரகூடர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் பற்றிய இரண்டு கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான 400 ஆண்டு கால வரலாறு இதில் இடம்பெறுகிறது.

இந்த கால கட்டத்தில் தென்னிந்தியா முழுவதையும் அண்ட பேரரசுகள், கோவில் கட்டமைப்புகள் மற்றும் நாட்டின் சமுதாய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளனர். இது பற்றிய கருத்தரங்கு கோவை எஸ்என்ஆர் கல்லூரி கருத்தரங்கில் வரும் மே12 மற்றும் 13ம் தேதிகளில் இரண்டு நாள் கருத்தரங்குகளாக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளன. 13 அமர்வுகளாக நடக்க உள்ள இதில், பல்வேறு கல்வியாளர்கள் பங்கேற்று படத்தொகுப்பு விளக்கங்கள் அளிக்கவுள்ளனர்.

மேலும் டாக்டர் ஆர்.நாகசாமி தலைமை ஏற்கும் இந்த நிகழ்வில், புனேயில் சிறந்த கல்வியாளரான டாக்டர் யு.டெக்லுர்கர், மைசுரிலிருந்து எம்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, விஜயவாடாவிலிருந்து டாக்டர் இ.சிவநாகி ரெட்டி மற்றும் முனைவர் சித்ரா மாதவன், முனைவர் வெங்கட்ராமன், முனைவர் டி.சத்தியமுர்த்தி, பேராசிரியர் சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த கருத்தரங்கில் பொதுமக்களும் பங்கேற்று மகிழ்ச்சியடையலாம். சிறிய அளவிலான தொகை, மதிய உணவுக்கும் செலுத்த வேண்டும். இரண்டு நாள் நடக்கும் இந்த கருத்தரங்கில், மாணவர்கள் தங்களது அடையாள அட்டையுடன் வந்தால் இலவசமாக பங்கேற்கலாம். இந்த நிகழ்வு சீக்சியா அமைப்பின் ஆதரவுடன் நடக்கிறது. இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு 9842251510 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...