சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவிகளை தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஒதுக்கீடு செய்யப்பட்ட கருவிகள் பாதுகாப்பு அறைகளில் இருப்பு வைக்கப்பட்டன.


Coimbatore: எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளை (VVPAT) சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை (First Randomisation) மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்பவன் குமார் தலைமையில் நடைபெற்றது.




இந்த முக்கியமான நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பிரிவு அலுவலர் முகமது குதரதுல்லா, Coimbatore மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், தேர்தல் வட்டாட்சியர் தணிகைவேல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை அமைப்பு மூலமாக EVM மற்றும் VVPAT கருவிகளின் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை (First Randomization) மேற்கொள்ளப்பட்டது. இது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையையும் நியாயத்தையும் உறுதிசெய்யும் முக்கிய நடவடிக்கையாகும்.




முதல் சமவாய்ப்பு செயல்முறை முடிந்த பின்னர், தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் (VVPAT) விரிவான பட்டியல்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டன.




இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் சரிபார்க்கும் கருவிகள் தேர்தலில் பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு (RO) மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு (ARO) வழங்கப்படும் வரை பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும்.




அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள்கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Room) இருப்பு வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் ஆய்வு செய்து உறுதி செய்தனர்.




இந்த வெளிப்படைத்தன்மை நிறைந்த செயல்முறை, வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...