ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் சீமா அறிவித்தது. GST வரியை 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை விடுத்தனர்.


Coimbatore: மூலப்பொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலை 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 2025-ல் 10 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக பம்ப்செட் பொருட்கள் விலை 2025 அக்டோபர் மாதம் 10 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், நிலைமை சீரடையாத காரணத்தால் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை பம்ப்செட் விலை உயர்த்தப்படுவதாக சீமா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீமா தலைவர் மிதுன் ராமதாஸ் கூறுகையில், "ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில் பல்வேறு நாடுகளில் நிலையற்ற தன்மை காணப்படும் போதும், இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. பிரதமர் Narendra Modi-யின் நடவடிக்கை பாராட்டுக்குரியது" என்றார்.

"தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை தொழில் துறையினர் எதிர்கொள்ள பல்வேறு உதவிகள் மத்திய அரசு செய்து வரும் நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினை தொழில் துறையினருக்கு தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஒரு ஆண்டில் காப்பர் மூலப்பொருள் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூபாய் 850-லிருந்து, ரூபாய் 1,200 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் மற்ற மூலப்பொருட்களான ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்கள் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள 2025 அக்டோபர் மாதம் பம்ப்செட் விலை 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது வரை இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத காரணத்தால் ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.

"பம்ப்செட் தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணவும், GST வரி விதிப்பு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மிதுன் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...