CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆகவும், ஆர்த்தோ ஒன் ஸ்பெஷாலிட்டி மையத்தின் இயக்குனர் கரோலின் ராஜன் Co-convenor ஆகவும் தேர்வு செய்யப்பட்டனர். மார்ச் 19ஆம் தேதி நடந்த நிகழ்வில் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Coimbatore: இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (CII) பெண்கள் பிரிவான Indian Women Network (IWN) கோவை மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மார்ச் 19ஆம் தேதி கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் நடந்த ஆண்டு விழாவில் இந்த தேர்வு நடைபெற்றது.

Richmond Talent Solutions நிறுவனத்தின் நிறுவனரான ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு பெண்கள் பிரிவின் கோவை மண்டல புதிய Convenor ஆக தேர்வு செய்யப்பட்டார். 2004ஆம் ஆண்டு முதல் தொழில் முனைவோராக தனது பயணத்தை தொடங்கிய இவர், கடந்த இரண்டு தசாப்தங்களாக தொழில்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறார்.


ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு தொழில்துறை மட்டுமின்றி சமுதாய முன்னேற்றத்திற்கும், குறிப்பாக கல்வித்துறை தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவரது தலைமையில் CII பெண்கள் பிரிவு கோவை மண்டலம் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Co-convenor பதவிக்கு கோவை ஆர்த்தோ ஒன் ஸ்பெஷாலிட்டி மையத்தின் இயக்குனர் கரோலின் ராஜன் தேர்வு செய்யப்பட்டார். மருத்துவத்துறையில் பணியாற்றும் இவர், விமானத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றிய பன்முக அனுபவம் கொண்டவர். இவரது பரந்த அனுபவம் பெண்கள் பிரிவின் செயல்பாடுகளுக்கு புதிய பரிமாணங்களை வழங்கும் என நம்பப்படுகிறது.


நிகழ்வில் பங்கேற்ற உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். CII பெண்கள் பிரிவு பெண் தொழில் முனைவோர் மற்றும் வணிக தலைவர்களுக்கு ஒரு முக்கியமான தளமாக செயல்பட்டு வருகிறது. கோவை மண்டலம் தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், அவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்கவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

Newsletter

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...