கோவை ரயில் நிலையத்தில் கைதி தப்பியோட்டம்



கருமத்தம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் பணம் திருடிய வழக்கில் தீனதயாளன் மற்றும் அவரது மனைவி பிரியங்கா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ஜாமீனில் வந்த அவர்கள் ஆந்திராவிற்கு தப்பி சென்று வேறு நிறுவனதில் பணியாற்றிய போது அங்கேயும் திருடி மாட்டிக்கொண்டனர். அப்போது நெல்லூர் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் இன்று நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜெ.எம்-2 நீதிமன்றத்திற்கு ஆந்திர போலீசார் ரயில் மூலம் அழைத்து வந்தனர். பாதுக்காப்பிற்காக 4 ஆந்திர போலீசார் உடனிருந்தனர்.

கால் ஊனமுற்ற தீனதயாளன் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று ஆந்திர போலீசாரிடம் கூறிய நிலையில், அவரை போலீசார் கழிவறைக்குள் செல்ல அனுமதித்தனர். அப்போது தீனதயாளன் சுவற்றின் மீது ஏறி தப்பிச்சென்றார். இது குறித்து கோவை ரயில்வே போலீசாரிடம் ஆந்திர போலீசார் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கைதியை தேடி வருகின்றனர்.

முன்னதாக, தீனதயாளன் மீது காளஹஸ்தி, சென்னை போன்ற இடங்களில் திருட்டு வழக்கு உள்ளது. தற்போது கண்காணிப்பு காமிராக்களில் தப்பிச்சென்ற தீனதயாளனின் பதிவான காட்சிகள் மூலம் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...