தீபாவளியை முன்னிட்டு கோவை கடல் கன்னி கண்காட்சி நவம்பர் 3 வரை நீட்டிப்பு

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் கடல் கன்னி கண்காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் கடல் கன்னி பொருட்காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 ஆம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கோவை மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.



கண்காட்சியில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண மீன்கள் உலாவரும் செயற்கை கடல் குகை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நான்கு கடல் கன்னிகளின் சாகசங்கள், மீன் உடையுடன் உலாவரும் கடல் கன்னிகள் ஆகியவை சிறப்பு கவர்ச்சிகளாக உள்ளன. குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் கடல் கன்னிகளுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட வர்த்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மக்கள் மட்டுமின்றி பெங்களூரு, பாலக்காடு போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் மக்கள் வந்து பார்வையிட்டு வருகின்றனர்.



வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சுழலும் ராட்டினம், குழந்தைகள் விளையாட்டு அரங்கம், பனி கூடம் (Snow World), பேய் வீடு, 3D காட்சிகள், பலூன் கேம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளன.

கண்காட்சி பங்குதாரர் சந்திரசேகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் அபுதாகிர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவை மக்களின் விருப்பத்தின் பேரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 3 ஆம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வருட தீபாவளியை கடல் கன்னி பொருட்காட்சியுடன் இணைந்து கொண்டாட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்," என்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...