செம்மேடு கிராமத்தில் கடையை உடைத்து அரிசி உண்ட காட்டு யானை: பெண்ணின் வேண்டுகோள் வீடியோ வைரல்

கோவை செம்மேடு கிராமத்தில் காட்டு யானை கடையை உடைத்து அரிசி உண்டது. பெண் ஒருவர் யானையிடம் வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர்.


Coimbatore: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூண்டி, வெள்ளியங்கிரி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள செம்மேடு கிராமத்தில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஒரு காட்டு யானை நுழைந்து கடையை உடைத்து அரிசி மூட்டையை உண்டு சேதம் விளைவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் போது, அங்கிருந்த ஒரு பெண் யானையை நோக்கி, "சாமி போயிடு, போ, போ" என்று கூறி கையெடுத்து கும்பிட்டதாக தெரிகிறது. இந்த காட்சி அருகில் இருந்தவரால் செல்போனில் வீடியோ எடுக்கப்பட்டு, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



கடந்த சில மாதங்களாக செம்மேடு கிராமத்தில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களுக்கும் சேதம் விளைவித்து வருகின்றன. இதனைத் தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், யானைகள் தொடர்ந்து ஊருக்குள் வருவது நிற்கவில்லை.

நேற்றிரவு நடந்த சம்பவத்தில், ஒரு ஒற்றை யானை கிராமத்திற்குள் நுழைந்து, ஒரு கடையை உடைத்து 25 கிலோ அரிசி மூட்டையை சாக்குப் பையுடன் உண்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், மூன்று வாகனங்களில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் வந்தனர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, அந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டு யானைகளின் தொடர் நுழைவைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...