வடகிழக்கு பருவமழை: திருப்பூரில் 52 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் - அமைச்சர் சாமிநாதன்

திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள 52 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் கண்காணிப்பு குழு அலுவலர் நிர்மல் ராஜ், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், திருப்பூர் மாவட்டம் முழுவதும் 52 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது வரை திருப்பூர் மாவட்டத்தில் பருவமழையால் பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அனைத்து அலுவலர்களும் தொடர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். வீரபாண்டி பகுதியில் 40 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்கள் மற்றும் தீர்வுகளை மாவட்ட நிர்வாகம் வழங்கும் என்றார்.

மாநகர் பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த குப்பைகளை பாறைக்குழியில் கொட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும், அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் இப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.

திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்த நாட்டு வெடி விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவும், சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக விரைவில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...