வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் சேவை நவம்பர் 16, 17 ஆகிய இரு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.



கோவை: வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பல்சக்கரம் மூலம் இயக்கப்படும் இந்த மலை ரயில், கல்லாரில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணித்து செல்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மலை ரயில் பாதை அமைந்துள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு ரயில்வே தண்டவாளங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. மேலும், மரங்கள் முறிந்து விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...