கோவை இரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள், கை கழுவும் தினம் மற்றும் உலக மாணவர் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் கலாம் முகமூடி அணிந்து, அவரது பொன்மொழிகளை ஏந்தி உறுதிமொழி எடுத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் இரத்தினபுரி மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் அக்டோபர் 15 அன்று அப்துல் கலாம் பிறந்த தினம், கை கழுவும் தினம் மற்றும் உலக மாணவர் தினம் ஆகியவை கொண்டாடப்பட்டன. இந்த நிகழ்வில் மாணவர்கள் அப்துல் கலாம் முகமூடி அணிந்து வந்திருந்தனர்.



கொண்டாட்டத்தின் போது, மாணவர்கள் அப்துல் கலாமின் சாதனையான ஏவுகணை முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவரது பொன்மொழிகளை கரங்களில் ஏந்தி மாணவர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.



அப்துல் கலாமின் பெரும் கனவான மரம் நடும் பணியிலும் மாணவர்கள் ஈடுபட்டனர். குழந்தைகள் கொண்டு வந்த அழகிய மலர் செடிகளை தங்கள் கரங்களால் பள்ளி வளாகத்தில் நட்டனர். மலர்ச்செடிகளை கொண்டு வந்த அனைத்து மாணவர்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சரோஜா பாராட்டி வாழ்த்தினார்.

இந்த நிகழ்வு மூலம் மாணவர்களிடையே அப்துல் கலாமின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை பற்றிய விழிப்புணர்வும் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...