கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இதனை துவக்கி வைத்தார்.


கோவை: கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கோவை மாநகராட்சி நிர்வாகம் தனியார் நீட் பயிற்சி மையத்துடன் இணைந்து இந்த வகுப்புகளை நடத்த உள்ளது.



இந்நிகழ்வின் துவக்க விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், "வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களின் வழக்கமான பள்ளி வகுப்புகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவை திட்டமிடப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியின் பல்வேறு பள்ளிகளில் இருந்து இந்த வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இப்பள்ளிக்கு அழைத்து வரப்படுவார்கள். அவர்களின் போக்குவரத்து மற்றும் உணவு செலவுகளை மாநகராட்சியே ஏற்கும்," என்று தெரிவித்தார்.

மேலும், மழை நீர் வடிகால் பணிகள் குறித்தும் அவர் பேசினார். "கோவை மாநகராட்சியில் அவிநாசி மேம்பாலம், காளீஸ்வரர் மேம்பாலம் ஆகிய இரண்டு இடங்களில் தான் அதிகளவு மழை நீர் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நீரை வெளியேற்றி போக்குவரத்தை சீர் செய்துள்ளோம். இனி மழைநீர் தேங்காத வண்ணம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார்.

ஆவாரம்பாளையம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 பேர் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கான உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் கூறினார். மேலும், அவர்கள் இழந்த ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

"கோவை மாநகராட்சி முழுவதும் மழை நீர் தேங்காமல் இருக்க முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உறுதியளித்தார்.

Newsletter

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...