கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் ஆளுநரிடம் மனு அளித்தார்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில், ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிரகாஷ் என்ற மாணவர், பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்தார்.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில், ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர், பல்கலைக்கழகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற்றபோது மனு அளித்தார். இச்செயல் விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.



பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரகாஷ், "பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மனு கொடுத்தற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் புகார் கொடுத்துள்ளேன்," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆய்வாளர்களை வழிநடத்தும் பேராசிரியர்கள், அவர்களது வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனர். அவர்களது குழந்தைகளை பார்ப்பதற்கும், பாத்திரம் கழுவவும், வங்கி வேலைக்கும் ஆய்வு மாணவர்களை பயன்படுத்துவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளேன்," என்றார்.

பிரகாஷ் தனது புகாரில், ஆதிதிராவிடர் விடுதிகள் பற்றியும், ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பிற்கான அதிக செலவு, விடுதி பராமரிப்பு நிதி முறைகேடு, விளையாட்டு மைதானங்களின் பயன்பாடு தடை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளார்.

"கடந்த 5 வருடங்களாக விளையாட்டு தினம் நடத்தாமல் பணத்தை மட்டும் வசூலித்து வருகின்றனர். இந்த அனைத்து பிரச்சினைகளையும் கவர்னரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்," என பிரகாஷ் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...