உடுமலையில் தமிழக வெற்றி கழகம் ஆலோசனைக் கூட்டம்: 2026-ல் விஜய் முதல்வராவார் என தீர்மானம்

உடுமலையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், 2026-ல் விஜய் தமிழக முதல்வராவது உறுதி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம் மாநாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடுமலை நகர தலைவர் ராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2026 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆவது உறுதி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் சங்கர் முன்னிலை வகித்து தொண்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் நடைபெறவுள்ள முதல் மாநாடு குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.



கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் திருமலை, மாணவரணி தலைவர் ஹரிஹரன், உடுமலை நகர நிர்வாகிகள் காஜா, பிரபு, சந்திரன், பிரேம்குமார், சையது இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடுமலை, குடிமங்கலம், உடுமலை தெற்கு ஒன்றியம், குடிமங்கலம் வடக்கு ஒன்றியம், குடிமங்கலம் ஒன்றிய மகளிர் அணி, உடுமலை தெற்கு பகுதி மகளிர் அணி மற்றும் உடுமலை நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு முன்னதாக, காமாட்சி அம்மன் கோவில், விநாயகர் கோவில், சிவன் கோவில் ஆகியவற்றில் விழுப்புரம் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஜி.கே. சங்கர், "விழுப்புரத்தில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டுக்கு கூட்டம் அதிகமாக வரும் நிலையில், அரசின் விதிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்து எடுத்துக் கூறப்பட்டது," என்றார்.

மேலும் அவர், "தற்சமயம் தமிழக மக்களுக்காக வாழும் நல்ல தலைவராக விஜய் உள்ளார். மாற்றுக் கட்சி சார்ந்த பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் விஜய் கட்சிக்கு வர தயாராக உள்ளனர். வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வர் ஆவது உறுதி," என்று தெரிவித்தார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...