கோவை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் திருவீதி உலா

கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் திருவீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று பாரம்பரிய கலைகளை நிகழ்த்தினர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கிடசாமி சாலையில் உள்ள வேதபாடசாலை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் (Sharathkala Navarathiri Mahotsavam) திருவீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது.



இந்நிகழ்வை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.



திருவீதி உலாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொண்டனர்.



அவர்கள் கொம்பு, நையாண்டி மேளம், செண்டை மேளம், காவடியாட்டம், தெய்யம், காளி ஆட்டம், திரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை நிகழ்த்திக்காட்டினர்.



இந்த ஊர்வலம் கோவிலில் இருந்து தொடங்கி திருவேங்கடசாமி சாலை, தடாகம் சாலை, பெரியசாமி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



மேலும், பல்வேறு வேடம் அணிந்து கொண்டு நடனம் ஆடியபடி ஊர்வலமாகச் சென்ற கலைஞர்களை அனைவரும் மிகுந்த வியப்புடன் பார்த்து ரசித்தனர். ஊர்வலம் சென்ற பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் நடைபெற்ற சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் திருவீதி உலா, கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத்தை ஒன்றிணைத்து கொண்டாடிய ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...