உடுமலையில் விஜயதசமி: ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி வழிபாடு

உடுமலை அருகே திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் விஜயதசமி விழாவின் போது, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.



திருப்பூர்: விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் தங்களது மழலைச் செல்வங்களை நெல்மணிகளில் "ஓம் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்" என எழுத வைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நாளில் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் கல்வி கற்கத் தொடங்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினால், அவர்கள் மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.



சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன் ஆரத்தி காட்டி, அன்று சில வரிகளாவது படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் என்ற நம்பிக்கையும் உள்ளது.





இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...