மேட்டுப்பாளையத்தில் தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகன ஓட்டுநர் காயம் - உதவாமல் சென்ற பேருந்து ஊழியர்கள்

மேட்டுப்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தை மோதியதில் ஓட்டுநர் காலில் முறிவு. விபத்துக்குப் பின் உதவாமல் சென்ற பேருந்து ஊழியர்களின் செயல் சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: மேட்டுப்பாளையத்தில் தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தியதில் வாகன ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு தினசரி பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பாதையில் தனியார் பேருந்துகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதாக புகார்கள் எழுந்துள்ளன. அசுர வேகத்தில் செல்லும் இந்த பேருந்துகள் மற்ற வாகனங்களை பொருட்படுத்தாமல் ஓட்டப்படுவதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு சென்ற 'தாமரை' என்ற தனியார் பேருந்து, ஹவுசிங் யூனிட் பகுதியில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை முந்த முயன்றபோது மோதியது. இதில் இருசக்கர வாகன ஓட்டுநர் கீழே விழுந்தார். பேருந்தின் சக்கரம் அவரது வலது காலில் ஏறி இறங்கியதால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் காயமடைந்தவரை பார்த்த பின்னர், மருத்துவமனைக்கு அனுப்பாமல் சாலையோரம் அமர வைத்துவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். காயமடைந்தவர் முதலில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டார்.

இந்த சம்பவம் அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்துக்குப் பின் உதவாமல் சென்ற பேருந்து ஊழியர்களின் செயல் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இது போன்ற விபத்துகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...