திருப்பூரில் மூன்று நாள் கேரம் ரேங்கிங் போட்டிகள்: தேசிய அளவில் தமிழ்நாடு அணிக்கு வீரர்கள் தேர்வு

திருப்பூரில் மூன்று நாள் கேரம் ரேங்கிங் போட்டிகள் நடைபெறுகிறது. வெற்றி பெறுவோர் தேசிய அளவில் தமிழ்நாடு அணி சார்பாக விளையாட தேர்வு செய்யப்படுவர். தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 670 வீரர்கள் பங்கேற்கின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் கூலிபாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் திருப்பூர் கேரம் அசோசியேஷன் சார்பாக கேரம் ரேங்கிங் போட்டிகள் இன்று தொடங்கி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆண்கள் பிரிவில் 350 பேரும், பெண்கள் பிரிவில் 250 பேரும், இரட்டையர் பிரிவில் சுமார் 70 பேரும் என மொத்தம் 670 பேர் கலந்து கொள்கின்றனர். ஆண்கள் சீனியர், பெண்கள் சீனியர், ஆண்கள் இரட்டையர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.



இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் ஆறு இடங்களைப் பிடிப்பவர்கள் தமிழ்நாடு சார்பாக தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவார்கள்.



இது தமிழ்நாட்டின் கேரம் வீரர்களுக்கு தேசிய அளவில் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இவற்றை வழங்க உள்ளார். இந்த நிகழ்வு திருப்பூரில் கேரம் விளையாட்டின் வளர்ச்சிக்கும், இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கிய படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...