திருப்பூர் பனியன் நிறுவனங்களில் விமரிசையாக நடைபெற்ற ஆயுதபூஜை விழா

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொழிலாளர்கள் ஏராளமாக பங்கேற்றனர். இயந்திரங்களுக்கு பூஜை செய்யப்பட்டு, வளாகம் அலங்கரிக்கப்பட்டது.



Coimbatore: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆயுதபூஜை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தொழில் நகரமான திருப்பூரில் இந்த விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன.



ஆயுதபூஜை நாளன்று, நிறுவனங்களின் வாசல்களில் வண்ணக் கோலமிடப்பட்டது. தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இயந்திரங்களுக்கு விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்தனர். பனியன் கம்பெனி வளாகம் முழுவதும் செவ்வந்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. வண்ண காகிதங்கள் மற்றும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டன. வாழைக்கன்று மற்றும் கரும்புகள் நடப்பட்டன. வாகனங்களும் அலங்கரிக்கப்பட்டன.

தொழிலில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் பதிவேடுகளை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தீபாராதனை காட்டப்பட்டு, தொழிலும் தொழிலாளர்களும் நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டுதல் செய்யப்பட்டது.

பூஜைக்குப் பிறகு, தொழிலாளர்களுக்கு பொங்கல், சுண்டல், பொறி ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...