காரமடை அருகே இஸ்லாமிய பாடசாலையில் லேப்டாப் திருட்டு: இரு நபர்கள் கைது

கோவை மாவட்டம் காரமடை அருகே வெண்மணி நகரில் உள்ள இஸ்லாமிய பாடசாலையில் லேப்டாப் திருட்டு நடந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இரு நபர்களை கைது செய்து திருடப்பட்ட லேப்டாப்பை மீட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் காரமடை அருகே வெண்மணி நகரில் உள்ள இஸ்லாமிய பாடசாலையில் லேப்டாப் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெண்மணி நகரில் இயங்கி வரும் இஸ்லாமிய பாடசாலையின் பொறுப்பாளராக முகமது நிவாஸ் பணியாற்றி வருகிறார். கடந்த எட்டாம் தேதி பாடசாலையை மூடிவிட்டு சென்ற அவர், மறுநாள் காலை திரும்பி வந்தபோது, பாடசாலையின் கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த விலையுயர்ந்த லேப்டாப் திருடப்பட்டிருப்பதை கண்டறிந்தார்.

உடனடியாக முகமது நிவாஸ் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் பாடசாலையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஊட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கோவை மத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து திருடப்பட்ட லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காரமடை போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...