கோவையில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்: 80 மனுக்கள் மீது விசாரணை

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 80 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 64 மனுக்களுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று (அக்டோபர் 9) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

இந்த குறை தீர்ப்பு முகாமில் மொத்தம் 80 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 64 மனுக்களுக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது. மேலும், ஒரு மனு மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.

எஞ்சிய 15 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இந்த குறை தீர்ப்பு முகாம் மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு விரைவான தீர்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான இடைவெளியை குறைக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காணவும் உதவுகின்றன.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...