கோவை மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை - பல பகுதிகளில் தொடர் மழை

கோவை மாவட்டத்தில் இன்று மதியம் முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காந்திபுரம், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மதியம் முதல் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அக்டோபர் 9 அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதியம் முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை காந்திபுரம், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், கோவைப்புதூர், உக்கடம், வடவள்ளி, தொண்டாமுத்தூர், சாய்பாபா காலனி, ரத்தினபுரி, சுந்தராபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

மேலும், ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...