உடுமலை அருகே மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நகரத்தில், விவசாய மின் இணைப்புக்கு ரூ.2000 லஞ்சம் கேட்ட உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரத்தில், விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கல் நகரத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன், தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற தட்கல் முறையில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், விண்ணப்பத்தின் பேரில் விவசாயி ஜெயராமனை அழைத்த கொங்கல் நகர உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து, மின் மீட்டர் பொருத்தி இணைப்பு தர ரூ.2000 லஞ்சமாக கேட்டுள்ளார்.



இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி ஜெயராமன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ.2000 பணத்தை உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்துவிடம் விவசாயி கொடுக்கும் போது, காத்திருந்த அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் சசிரேகா தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லஞ்ச பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடுமலை அருகே விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்ட இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...