தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு அன்னூர் மாணவர் தேர்வு: தமிழக அணியில் இடம்பிடித்த ஸ்ரீ ரித்திக்

கோவை அன்னூர் அருகே உள்ள கிருஷ்ண கவுண்டன் புதூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீ ரித்திக், 14 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Coimbatore: கோவை நேரு விளையாட்டரங்கில் செயல்பட்டு வரும் விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்று வரும் அன்னூர் அருகே கிருஷ்ண கவுண்டன் புதூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீ ரித்திக், தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை நேரு விளையாட்டரங்கில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வரும் ஸ்ரீ ரித்திக், கோவை ராம் நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு ஆணையம் சார்பில், 2024-25ம் கல்வியாண்டுக்கான 14 வயதுக்கு உட்பட்ட தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதற்கான மாநில அளவிலான வீரர்கள் தேர்வுப் போட்டி அண்மையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ ரித்திக், சிறப்பாக விளையாடி தமிழக அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சார்பில் விளையாட உள்ளார்.

தமிழக அணிக்குத் தேர்வு பெற்ற ஸ்ரீ ரித்திக்குக்கு விளையாட்டு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...