ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் - கோவை பட்டாசு விற்பனையாளர்கள் கோரிக்கை

கோவையில் பட்டாசு விற்பனையாளர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, ஆன்லைன் பட்டாசு விற்பனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி, அரசு இதனை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


Coimbatore: கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை இன்று (அக்டோபர் 9) சந்தித்தனர். இச்சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் இராமையா ஆகியோர் ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்தால் சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.

அவர்கள் கூறியதாவது: "ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தும், ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் விற்பனையால் அரசுக்கு எந்த லாபமும் இல்லை. எனவே, அரசு ஆன்லைன் பட்டாசு விற்பனையை உடனடியாக தடை செய்ய வேண்டும்."

"ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பட்டாசுகள் பாதுகாப்பற்ற முறையில், வழக்கமான போக்குவரத்து வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. மேலும், தள்ளுபடி என்ற பெயரில் தரமற்ற பட்டாசுகள் விற்கப்படுகின்றன. சிவகாசியை மையமாகக் கொண்டு கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தரமற்ற பொருட்கள் விற்கப்படுகின்றன. இவ்வாறு விற்பனை செய்பவர்கள் ஜிஎஸ்டி பில் வழங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் புகார் அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது," என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

வியாபார உரிமம் தொடர்பாக அவர்கள் கூறுகையில், "தற்போது 10 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வியாபார உரிமத்தை 15 நாட்களாக நீட்டிக்க வேண்டும். மேலும், பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தனர்.

சரவெடி தயாரிப்பு குறித்தும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். "சரவெடியை பழைய முறைப்படி இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்க அனுமதிக்க வேண்டும். அரசு கூறிய புதிய நிபந்தனைகளின்படி சரவெடியை தயாரிக்க இயலாது," என்று அவர்கள் தெரிவித்தனர்.

இறுதியாக, "தீயணைப்புத் துறையின் அறிவுறுத்தலின்படி பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்பது குறித்த நோட்டீஸ்களை அனைத்து பட்டாசு கடைகளிலும் வழங்க உள்ளோம். மேலும், 'இந்த தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவோம்' என்ற வாசகத்துடன் கடைகளில் விளம்பரப் பலகைகள் வைக்கப்படும்," என்று அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...