ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் - கோவை பட்டாசு விற்பனையாளர்கள் கோரிக்கை

கோவையில் பட்டாசு விற்பனையாளர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, ஆன்லைன் பட்டாசு விற்பனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி, அரசு இதனை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


Coimbatore: கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை இன்று (அக்டோபர் 9) சந்தித்தனர். இச்சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் இராமையா ஆகியோர் ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்தால் சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.

அவர்கள் கூறியதாவது: "ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தும், ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் விற்பனையால் அரசுக்கு எந்த லாபமும் இல்லை. எனவே, அரசு ஆன்லைன் பட்டாசு விற்பனையை உடனடியாக தடை செய்ய வேண்டும்."

"ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பட்டாசுகள் பாதுகாப்பற்ற முறையில், வழக்கமான போக்குவரத்து வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. மேலும், தள்ளுபடி என்ற பெயரில் தரமற்ற பட்டாசுகள் விற்கப்படுகின்றன. சிவகாசியை மையமாகக் கொண்டு கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தரமற்ற பொருட்கள் விற்கப்படுகின்றன. இவ்வாறு விற்பனை செய்பவர்கள் ஜிஎஸ்டி பில் வழங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் புகார் அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது," என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

வியாபார உரிமம் தொடர்பாக அவர்கள் கூறுகையில், "தற்போது 10 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வியாபார உரிமத்தை 15 நாட்களாக நீட்டிக்க வேண்டும். மேலும், பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தனர்.

சரவெடி தயாரிப்பு குறித்தும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். "சரவெடியை பழைய முறைப்படி இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்க அனுமதிக்க வேண்டும். அரசு கூறிய புதிய நிபந்தனைகளின்படி சரவெடியை தயாரிக்க இயலாது," என்று அவர்கள் தெரிவித்தனர்.

இறுதியாக, "தீயணைப்புத் துறையின் அறிவுறுத்தலின்படி பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்பது குறித்த நோட்டீஸ்களை அனைத்து பட்டாசு கடைகளிலும் வழங்க உள்ளோம். மேலும், 'இந்த தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவோம்' என்ற வாசகத்துடன் கடைகளில் விளம்பரப் பலகைகள் வைக்கப்படும்," என்று அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...