இளைஞர் வேலைவாய்ப்புக்காகவே முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் - மேட்டுப்பாளையத்தில் நீலகிரி எம்பி ஆ.ராசா பேச்சு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையத்தில் ரூ.1.08 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் துவக்கி வைத்த நீலகிரி எம்பி ஆ.ராசா, முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விளக்கமளித்தார்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீலகிரி எம்பியும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கலைஞர் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கான ஆணைகளையும் ஆ.ராசா வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்குத் தேவையான தொழிற்சாலைகள் போதிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை என்றார்.



"புதிய தொழிற்சாலைகளை தமிழகத்துக்குக் கொண்டு வந்து இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகப்படுத்தவே முதல்வர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்," என்று ஆ.ராசா தெரிவித்தார்.

மேலும், "தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள் முறையாகச் செயல்படுகின்றனரா என உளவுத்துறை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மக்கள் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க தங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்த திமுக அரசு பாடுபடும்," என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பள்ளேபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார், திமுக ஒன்றியச் செயலாளர் சுரேந்திரன், எஸ்.எம்.டி கல்யாணசுந்தரம், டி.ஆர்.எஸ் சண்முகசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...