உடுமலை அருகே விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உடுமலை அருகே பொலிரோ வாகனமும் டெம்போ டிராவல்ஸும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலரும் காயமடைந்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொலிரோ வாகனமும் டெம்போ டிராவல்ஸும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 12 மணியளவில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து தியாகராஜன் (45), அவரது மனைவி பிரித்தி (40), மகன்கள் ஜெயப்பிரியன் (11), ஜீவப்பிரியன் (13) மற்றும் பெற்றோர் உள்ளிட்ட 6 பேர் கோவை மாவட்டம் தாமரைக்குளத்தில் நடந்த இறப்பு நிகழ்வுக்குச் சென்று திரும்பி வந்தனர்.



உடுமலை அருகே உள்ள கருப்புசாமி புதூர் பகுதியில், பாலக்காடு நோக்கி வந்துகொண்டிருந்த டெம்போ டிராவல்ஸுடன் அவர்கள் பயணித்த பொலிரோ வாகனம் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தியாகராஜன், அவரது மனைவி பிரித்தி, மகன் ஜெயப்பிரியன் மற்றும் தாய் மனோன்மணி (65) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



விபத்தில் படுகாயமடைந்த தியாகராஜனின் தந்தை நாட்ராயன் (75) மற்றும் மகன் ஜீவப்பிரியன் ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

டெம்போ டிராவல்ஸில் பயணித்த 23 பேரில் சுமார் 12 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் பாலக்காட்டிற்குச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும் உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த சோகமான சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...