கோவை குனியமுத்தூரில் அதிமுக நிர்வாகி மீது அரிவாள் தாக்குதல்: இரு இளைஞர்கள் கைது

கோவை குனியமுத்தூரில் அதிமுக 92-வது வார்டு செயலாளர் ஜூனியர் ராஜா மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிமுக நிர்வாகி ஒருவர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்று அழைக்கப்படும் ஜூனியர் ராஜா (42) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதோடு, கோவை மாநகர அதிமுகவின் 92-ஆவது வார்டு செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, ஜூனியர் ராஜா குனியமுத்தூர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென இரு நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கினர். இந்த தாக்குதலில் ஜூனியர் ராஜா கடுமையாக காயமடைந்தார். தாக்குதல் நடத்திய இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர்.

பலத்த காயமடைந்த நிலையில் ஜூனியர் ராஜா அருகிலிருந்தவர்களால் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்த தகவலறிந்து விரைந்து வந்த குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், குனியமுத்தூரில் பதுங்கியிருந்த இரு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் (21) மற்றும் பூமிஸ்வரன் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்கொண்ட விசாரணையில், கோபிநாத் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஜூனியர் ராஜாவுடன் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக, கோபிநாத் தனது நண்பன் பூமேஸ்வரனை கரூரிலிருந்து அழைத்து வந்து ஜூனியர் ராஜா மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...