கோவையில் சொத்து வரி உயர்வை எதிர்த்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்

கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இன்று (அக்டோபர் 8) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்தது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் 100% வரி உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், வருடா வருடம் வரி உயர்வு மக்களை பாதிக்கும் என்றும் வேலுமணி தெரிவித்தார்.



கொரோனா காலத்திலும் மக்களை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரிகளை உயர்த்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மின் கட்டண உயர்வால் கோவையில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.



போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்றும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சாலைகள், பாலங்கள், அத்திக்கடவு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் வேலுமணி தெரிவித்தார். இப்போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிவடைந்தது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...