கோவை உடையாம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே கள்ள சந்தையில் மது விற்பனை - சப்ளையர் கைது

கோவை உடையாம்பாளையத்தில் டாஸ்மாக் கடை பின்புறம் கள்ள சந்தையில் மது விற்பனை செய்த சப்ளையர் கைது செய்யப்பட்டார். போலீஸ் சோதனையில் 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை உடையாம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே கள்ள சந்தையில் மது விற்பனை செய்த சப்ளையர் கைது செய்யப்பட்டார்.

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் குரு கணேஷ் ஆகியோர் நேற்று (அக்டோபர் 7) உடையாம்பாளையம் டாஸ்மாக் கடை (எண் 16 18) பின்புறம் உள்ள காலி இடத்தில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை சேர்ந்த மங்கையநேந்தல் ஊரைச் சேர்ந்த சரவணன் (வயது 41) என்பவர் கைது செய்யப்பட்டார். சரவணன் அங்குள்ள பாரில் சப்ளையராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. இவரிடமிருந்து 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ள சந்தையில் மது விற்றதாக இவர் மீது ஏற்கனவே 16 வழக்குகள் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...